பேருண்மையின் விழிகள் எப்போதும்
திறந்தேயிருக்கின்றன
சிறிய பொய்களை பட்டப்பகலில்
மரத்திலிருந்து பறித்து உண்கிறோம்
அதன் தர்க்கங்களை மீண்டும்
மீண்டும் ஒரு மந்திரம் போல்
ஜெபித்துக்கொண்டே இருக்கிறோம்,
சிரிக்கிறோம் , அழுகிறோம் , வாழ்கிறோம்
காலத்தின் மீதேறி வெகு தூரம் செல்கிறோம் , எனினும்
பேருண்மையின் விழிகள் எப்போதும்
திறந்தே தான் இருக்கின்றன.
- ik