Wednesday, 29 October 2025

என்னைத் தேடினாயா?

என்னைத் தேடினாயா?

தோட்டத்தில் ஊர்ந்து சென்ற
நத்தையின் ஓட்டுக்குள்,
பச்சை முட்களால் சூழ்ந்த
எலுமிச்சை மரத்தில் குருவி
கட்டியிருந்த கூட்டுக்குள்,
சுவற்றுக்கும் அலமாரிக்கும்
இடைப்பட்ட சந்திற்குள்,
என் நினைப்பிற்கும் அது
மற்றொன்றாய் மருவிய
இடைப்பட்ட காலத்திற்குள்
தான் இருந்தேன்.

No comments:

Post a Comment