உன் இருப்பிடத்தின் கொல்லைபுரத்தில்
கொக்கறிக்கிறது கடல் ,
தன் இருப்பை பற்றிய பெருமிதம் அதற்கு.
மேஜை டிராயரை அடிக்கடி திறந்து
ஒரு ரகசிய பொருளின் இருப்பை
மீண்டும் மீண்டும் உறுதி செய்துகொள்கிறேன்
இப்படி செய்வது ஒரு மனநோயின்
அறிகுறி என்கிறார்கள் ,
அவர்கள் கிடக்கட்டும் நீ அறிவாய்
தானே , ஒவ்வொரு முறையும்
"இருக்கிறது" என்று உறுதிசெய்த பின்
விடும் பெருமூச்சின் உஷ்ணத்தை.
No comments:
Post a Comment